
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் 14.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சோழவரம்: நாரணம்பேடு, கோட்டைமேடு, பெரியகாலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
அடையார்: பெசன்ட்நகர், மாளவியாஅவென்யூ 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி, 1 முதல் 3வது தெரு, மாளவியா அவென்யூ, எம்.ஜி.ரோடு, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு ஆர்.கே.நகர், மருந்தீஸ்வர்நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 1,5,6,வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர்.
தரமணி: டாக்டர்.அம்பேத்கர் புரட்சி நகர், கோவிந்தசாமி நகர், செம்பொன் நகர், ஜே.ஜே.நகர், பழைய காமராஜர் நகர், பெருந்தலைவர் காமராஜ் நகர், சந்தியப்பன் சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, ஒயர்லெஸ் குடியிருப்பு, ஷமீர் அலுவலகம்.
அரும்பாக்கம்: ஜெய் நகர் 4 முதல் 7 வரை, பிரகதீஸ்வரர் நகர், துரை பிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, பாஞ்சாலி அம்மன் தெரு, சஞ்சீவி தெரு, நேரு தெரு மற்றும் நகர், வீணா கார்டன், பி.வி.நகர், புதிய தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






