தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
x
Daily Thanthi 2025-08-14 06:21:05.0
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனிடையே இந்த கைது சம்பவத்தின்போது, சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் என வழக்கறிஞர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையுமில்லை. அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது அதை காவல் துறையினர் தடுத்தால் தலையிடலாம். அனுமதி பெறவில்லை என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 More update

Next Story