அனைவரும் ஓரணியில் இருந்தால், டெல்லி அணியின் காவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 07:41:07.0
t-max-icont-min-icon

அனைவரும் ஓரணியில் இருந்தால், டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது: மு.க.ஸ்டாலின் பேச்சு


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

"மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று சேவையை வழங்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் முகாம்களில் வந்து விண்ணப்பித்தால் போதும். முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்

இவ்வாறு கூறினார். 


1 More update

Next Story