
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய ஐகோர்ட்டு தடை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து. அம்மாநில முதல்-மந்திரியின் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.
அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.






