
பாமக தலைவர் ராமதாஸ் தான்.. கூட்டணி முடிவை அவரே எடுப்பார்.. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதில் பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசுக்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






