15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
x
Daily Thanthi 2025-09-17 06:03:45.0
t-max-icont-min-icon

15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story