ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
x
Daily Thanthi 2025-09-17 11:43:29.0
t-max-icont-min-icon

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய குழந்தை தனது வயிற்றில் இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடவும் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் “மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட கோர்ட்டு , வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

1 More update

Next Story