
கலைஞர் பாணியில் கடைசி வரை நான்தான் தலைவர் - ராமதாஸ்
தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் விரும்பியது போல், என்னால் தொடங்கப்பட்ட கட்சி பாமக. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்த இந்த கட்சிக்கு நான் தான் தலைவர். நிர்வாகிகளுக்கு நான் வழங்கியபொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. போஸ்டர் கிழிப்பு சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு இல்லை. யாராக இருந்தாலும் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது
தேவைப்படும் நேரத்தில் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். என் மனசும், மனசாட்சியும் சொன்னதால்... நான் மூச்சு இருக்கும் வரை தலைவராக இருப்பேன்.
கலைஞர் கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான்செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும். கலைஞர் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை.
செயல் தலைவர் என்பது சிறந்த பொறுப்பு அதை அன்புமணி ஏற்க மாட்டேன் என்கிறார். எனது 60-வது திருமண நாள் நிகழ்ச்சிக்கு அன்புமணி வராதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






