திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
x
Daily Thanthi 2025-06-29 10:47:37.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.

அண்ணாமலையார் திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story