
மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா துணை அமைச்சர் ராஜேந்திரன் நீர் வெளியேற்றத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு 12 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து ஜூன் 12-ல் காவிரி படுகை பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 68 ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் 2-வது முறையாக முழு கொள்ளளவை அணை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44-வது முறையாகும்.






