தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
x
Daily Thanthi 2025-06-29 14:31:53.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story