
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
கனமழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேமம் ஏரி திறக்கப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது. இன்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 6,622 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தம் 24 அடி கொண்ட ஏரியில் நீர்மட்டம் 22.43 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,230 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே செம்பரம்பாக்கம் சேன்ட்ரோ சிட்டி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





