
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ். வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் ஒரு முறை சந்தித்து இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட மும்பை அணி வரிந்து கட்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.






