
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கூட்டத்தில் பேசினர். இதன்பின்னர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.






