சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்குபட்ஜெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
x
Daily Thanthi 2025-02-03 03:33:54.0
t-max-icont-min-icon

சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி கடந்த 31-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "ஜனாதிபதி, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்" என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த கருத்து பா.ஜனதாவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


1 More update

Next Story