இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
x
Daily Thanthi 2025-04-05 08:15:23.0
t-max-icont-min-icon

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாட்டுக்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக கூடுதலாக ரூ.522.34 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

இதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான புயல் வெள்ள பாதிப்புகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிதிஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரிக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story