
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, இன்று முதல் 9-ந்தேதி வரையிலான 5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாஷ்கண்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சமூக மேம்பாடு மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நடவடிக்கை என்ற தலைப்பிலான பொது விவாதத்தில் பங்கேற்று ஓம் பிர்லா உரையாற்றுவார்.
இதேபோன்று நிகழ்ச்சியில் பங்கு பெறும் பிற நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்களையும் சந்தித்து அவர் பேசுவார். இந்திய சமூக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார் என மக்களவை செயலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





