Daily Thanthi 2025-04-05 13:19:42.0
t-max-icont-min-icon

இலங்கையின் கொழும்பு நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.                

இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்தியில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமுகமான சந்திப்பு நடைபெற்றது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவு பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story