
ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த மருத்துவமனையில் ஒருபகுதி சுவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சாலைப்பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த நிலையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் சுற்றுச்சுவரின் மீதி எஞ்சிய பகுதியும் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





