2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற மத்திய அரசின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
Daily Thanthi 2025-02-06 10:38:56.0
t-max-icont-min-icon

2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? ஆம் ஆத்மி கேள்வி

நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கை விலங்குகள் போடப்பட்டன என கூறப்படும் விவகாரம் பற்றி ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறும்போது, முதலில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் என அவர்களை கூறுவதே தவறு.

வாழ்வைத்தேடி அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றனர். அவர்கள் பயங்கரவாதிகளோ அல்லது குற்றவாளிகளோ அல்ல.

ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் தரப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க தவறி விட்டது என கூறியுள்ளார்.

1 More update

Next Story