அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
x
Daily Thanthi 2026-01-07 08:00:59.0
t-max-icont-min-icon

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வரும் 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. 

1 More update

Next Story