டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
Daily Thanthi 2025-11-07 11:17:15.0
t-max-icont-min-icon

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக தற்போது வெங்கடராமன் உள்ளார். இந்த நிலையில் புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

இந்தநிலையில், யுபிஎஸ்சி பரிந்துரையில் டிஜிபியை நியமிக்க தவறிய தமிழ்நாடு அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி கிஷோர் கிருஷ்ணசாமி என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 3 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் தர நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஹென்றி திபேன் வழக்கில், யுபிஎஸ்சி பரிந்துரையில் டிஜிபியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story