பள்ளிப்பேருந்து மீது தாக்குதல்: குழந்தைகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 12:06:16.0
t-max-icont-min-icon

பள்ளிப்பேருந்து மீது தாக்குதல்: குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? - எடப்பாடி பழனிசாமி

குற்றவாளிகளை பிடிக்க திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பல குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?

குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

1 More update

Next Story