விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு


விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Daily Thanthi 2025-01-09 15:02:05.0
t-max-icont-min-icon

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்-06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story