
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 31 பேரை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது சுட்டு கொன்றனர்.
இதற்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். நம்முடைய வீரர்களை, அவர்களின் துணிச்சலுக்காக நாம் பாராட்டுவோம். இந்த வெற்றிக்காக வீரர்களை நான் வாழ்த்துகிறேன். 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





