
ஆபரேசன் சிந்தூர்: பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது - உறுதி செய்த விமானப்படை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேசன் சிந்தூர் குறித்து பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், “பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படையின் S-400 மூலம் பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று அவர் கூறினார்.
வானில் நடுவில் தாக்கப்பட்ட ஆறு விமானங்களைத் தவிர, இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படை தரையில் சந்தித்த இழப்புகளையும் ஏ.பி. சிங் உறுதிப்படுத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





