
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள்.
இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






