
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 12ம் தேதி பாமகவினர் ஆர்ப்பாட்டம் - ராமதாஸ்
சமூக நீதியை வென்றெடுக்க நடைபெறும் அறப்போராட்டத்திற்கு சென்னையில் நான் தலைமை ஏற்கிறேன். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் முன்பே அறிவித்துள்ளவாறு மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமை ஏற்பார்கள்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களது மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, வட்ட, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் போராட்டத்தில் சமூகநீதியை வென்றெடுக்க பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.






