
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிரம்மோஸ் விமான தளம் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை மையத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை காணொலி காட்சி வழியே திறந்து வைத்த மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, இன்று தேசிய தொழில்நுட்ப தினம் ஆகும்.
1998-ம் ஆண்டு இதே நாளில், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் நம்முடைய விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுஆயுத பரிசோதனையை நடத்தினார்கள். இதில், இந்தியாவின் பலம் உலகிற்கு எடுத்து காட்டப்பட்டது.
நம்முடைய விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பலருடைய ஆழ்ந்த முயற்சிகளின் விளைவால் அந்த பரிசோதனை நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





