நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
Daily Thanthi 2025-01-12 06:29:23.0
t-max-icont-min-icon

நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது. யானை காந்திமதிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. இதன்பின்னர் யானை காந்திமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நித்திய பூஜைக்கு பின் நெல்லையப்பர் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

பரிகார பூஜைக்கு பின் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. யானை காந்திமதிக்கு கண்ணீர் மல்க பக்தர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

1 More update

Next Story