மெட்ரோ விபத்து: ஒருவர் பலி - விசாரணை நடத்தப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
x
Daily Thanthi 2025-06-13 03:44:07.0
t-max-icont-min-icon

மெட்ரோ விபத்து: ஒருவர் பலி - விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்திற்குமுன் அமைக்கப்பட்ட இரு தூண்கள், இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாகாவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மெட்ரோ தூண்கள் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்தார்.

1 More update

Next Story