சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 06:41:30.0
t-max-icont-min-icon

சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது - சபாநாயகர்

முதல் நாளில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

1 More update

Next Story