தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
x
Daily Thanthi 2025-05-16 12:31:48.0
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உடன்குடி அனல்மின்நிலையம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டில் விடப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் ஒருவரின் மெயிலுக்கு அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் நீண்ட நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. எனினும், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story