பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
x
Daily Thanthi 2025-10-16 07:43:23.0
t-max-icont-min-icon

பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு உறுதியானது -அமைச்சர் டிஆர்பி ராஜா

ஆந்திராவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது குறித்த அதிமுகவின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் ‘கன்வர்ஷன் ரேட்' 77 சதவீதம் ஆக உள்ளது. பக்கத்து மாநில முதலீடு குறித்து, நான் பேசவில்லை. அதில் உள்ள அரசியலும் உங்களுக்கு தெரியும். எந்த முதலீடுகள் எல்லாம் வேலைவாய்ப்பாக மாறுமோ, அதை மட்டும் தான் புரிந்துணர்வு ஒப்பந்தமாக தமிழ்நாடு அரசு கையெழுத்திடுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ தங்கமணி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “பாக்ஸ்கான் நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தம் நிச்சயமாக வருகிறது; பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு உறுதியானது. இதனை கொச்சைப்படுத்துவது பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயலாகும்” என்று கூறினார்.

1 More update

Next Story