
“ஜனாதிபதிக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” - ஜகதீப் தன்கர் கேள்வி
மாநிலங்களவை பயிற்சியாளர்கள் குழுவிடம் பேசிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், “சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் ஜனாதிபதிக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே போகிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது.
சட்டம் இயற்றும், நிர்வாக பணிகளை செய்யும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த பொறுப்புணர்வும் இல்லை. ஏனெனில் இந்நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அளவுக்கு என்ன சூழல் தற்போது உருவாகி உள்ளது.
அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. ஆனால் பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல சுப்ரீம்கோர்ட்டு மாற்றி உள்ளது” என்று கூறினார்.






