
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, சாலையோரங்களில் நடப்படும் கொடி கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடி கம்பங்கள் அமைக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அதனுடன், அரசு இடங்களில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், ஜூலை 2-ந்தேதிக்குள் ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story






