சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 12:26:40.0
t-max-icont-min-icon

சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு: தடை செய்யப்பட்ட மருந்து காரணமா?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு சளி பிரச்சினை இருந்துள்ளது. உடனே, குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தைக்கு சளி குறைய பணியில் இருந்த டாக்டர் சொட்டு மருந்து ஒன்று கொடுத்துள்ளார். பெற்றோரும் அந்த மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். ஆனால், மருந்தை குடித்த குழந்தை சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போனது.

1 More update

Next Story