பெண் டாக்டர் பலாத்காரம், கொலை வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
Daily Thanthi 2025-01-20 08:01:21.0
t-max-icont-min-icon

பெண் டாக்டர் பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தண்டனை தொடர்பான வாதத்தின்போது, சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கும்படி சஞ்சய் ராயின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதேசமயம், தான் குற்றம் செய்யவில்லை என்று சஞ்சய் ராய் கூறினார். 

1 More update

Next Story