தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கனமழை பெய்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
Daily Thanthi 2025-06-21 04:06:58.0
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கனமழை பெய்து வரும் சூழலில், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. கடந்த 18-ந்தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story