
வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக வரும் 24ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை சென்னை முழுவதும் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக தினசரி 2 முதல் 10 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் நடைபெறும் இடங்கள் தொடர்பான விவரங்களை http://tnuhdb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில், பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கிரையப் பத்திரம் மற்றும் பட்டா பெற்று பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





