காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அமரன் பட இயக்குனர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
x
Daily Thanthi 2025-04-23 09:11:39.0
t-max-icont-min-icon

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.

அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர். தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story