
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதேபோன்று கோலியும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். கோலி, ரோகித் இல்லாத சூழலில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளார். முகமது ஷமி முழு உடல் தகுதியுடன் இல்லை. அதனால், அவர் அணியில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






