
ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளன என டிரம்ப் கூறியுள்ள சூழலில், அதற்கு முன்பே ஈரான் தலைவரின் இந்த அறிவிப்பு வெளிவந்து இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான் மந்திரி அராக்சியும் போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். கத்தாரை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் மர்ம டிரோன்கள் தாக்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.






