
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணிக்கும் இனி வரும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.






