
ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்
சமயநல்லூர் - மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வண்டி எண்-16845) நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் திண்டுக்கல்-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படாது.
இதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-16846) வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை (4 நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட 4 நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






