4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 12:12:34.0
t-max-icont-min-icon

4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story