கரூர் சம்பவம்: சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 14:07:43.0
t-max-icont-min-icon

கரூர் சம்பவம்: சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை: கனிமொழி எம்.பி.

கரூரில் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர், நான் அரசியல் பேச விரும்பவில்லை. யார் மீது பழிபோடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள்.

இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது, முதல்-அமைச்சரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்போடு, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்றார்.

1 More update

Next Story