கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 08:23:39.0
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story