தீண்டாமை வன்கொடுமை:பெண் உள்பட ஆறு பேருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தொடர்பான வழக்கில் பெண் உள்பட ஆறு பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையலராக பணியாற்ற விடாமல் தடுத்ததாக 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பள்ளியில் சமையலராக பாப்பாள் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆதிக்க சாதியினர் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





