
எனக்கு பயம் கிடையாது - 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி பேட்டி
ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி அளித்த பேட்டியில், "இது மிகவும் நல்ல உணர்வு. இது ஐ.பி.எல்.-லில் எனது முதல் சதம். அதுவும் எனது மூன்றாவது இன்னிங்சிலேயே வந்தது சிறப்பானது. இந்த போட்டிக்கு முந்தைய என்னுடய பயிற்சியின் விளைவு இங்கே காட்டப்பட்டுள்ளது. நான் பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.
ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்வது நல்லது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்கிறார். மேலும் அவர் நேர்மறையான விஷயங்களை எனக்குள் செலுத்துகிறார். ஐ.பி.எல்.-லில் 100 ரன்கள் எடுப்பது கனவாக இருந்தது. இன்று அது நிறைவேறியுள்ளது. எனக்கு பயம் கிடையாது. நான் அதிகம் யோசிக்கவில்லை. நான் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.
Related Tags :
Next Story






